states

img

உ.பி. முதல்கட்டத் தேர்தல் முடிந்தது

உத்தரப்பிரதேசத்தில் ஏழு கட்ட சட்டமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10 வியாழனன்று துவங்கியது. 12 மாவட்டங்களில் உள்ள 58 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் துவங்கி மாலை 5 மணி வரை விறுவிறுப்புடன் நடந்தது. கடும் குளிரிலும் வாக்குச்சாவடிகளில் குவிந்த வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். முதற்கட்டத் தேர்தலில் 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.27 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். சமாஜ்வாதி, காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியே களம் காண்கின்றன.